Tuesday, May 22, 2007

பள்ளிப் பருவம் - ஒண்ணு

காலில 6 மணிக்கே எங்க அம்மா என்ன எழுப்பி விட்டுடும் ..அகில இந்திய வனொலில ஆங்கில செய்தி ஓடிகிட்டு இருக்கும். எனக்கும் எங்க அம்மாவுக்கும் அதுதா கடிகாரம்...

அப்படி இப்படி இன்னு கிளம்ப 8 மணி ஆயிடும். வேக வேகமா கொஞ்ச குழம்பு, அப்புரம் ரசம், கடைசியில் தயிர் ஊத்தி சாப்பிட்டுட்டு, அம்மா கொடுக்கும் 10 பைசாவை சட்டை பையில் போட்டுட்டு, மஞ்ச ஒயர் கூடையை தோலில் தூக்கி போட்டுகிட்டு நடக்க ஆரம்பிப்பேன் நண்பர்களுடன்...

ஒரு மைல் தூரம், இருந்தாலும் போர அலுப்புத் தெரியாது, விளையாடிட்டே போரதால...புலிங்கா அடிக்கிரது, ஒடக்கா அடிக்கிரது, சக்கரத்த ஒட விட்டு அதுக்கு பின்னாடி ஓடுரது, வேகமா வீட்டுக்கு வர்ரதுக்காக ஒரு கரண்டுமரம் விட்டு ஒரு கரண்டுமரம் ஓடுரது, எப்பவாவது யாரவது தெரிஞ்சவங்க வந்தா அவங்களொட சைக்க்ள்ல தொத்திக்கிறது, மாட்டு வண்டில பின்னாடி பைய மாட்டி விட்டுட்டு, பின்னாடியே ஒடிவர்ரது...இது போல இன்னும் பல அனுபவங்கள்..

மழை பேய்ந்தா மட்டும் பஸ்...ஒரு ருபாய்..போக 50 பைசா வர 50 பைசா..சாய்ங்களம் மழை வராட்டி மறுபடியும் நடைதான்..ஒரு சில நாள் மட்டும் அந்த 50 பைசாவே செலவு பண்ணிடுவே..இல்லாட்டி அம்மாகிட்டே திருப்பி கொடுத்துடுவே அந்த 50 பைசாவே..

யாரவது சொந்தகாரங்க வந்தா இன்னும் சந்தோசம்..என்ன கொஞ்ச அதிக காசு கிடைக்கும் வாங்கி திங்க...அதுவும் எங்க பெரியம்மா வந்த ரொம்ப சந்தோசப் படுரவ நனாத்தா இருப்பே....

புலிங்கா திங்கிரதுக்கு உப்பு மொலகாப் பொடி வேர..விட்டுல இருந்தே காகித பொட்டலத்துல...அதுலையும் துவுரு அடுச்சு, தொல்லிய கொஞ்சம் பிருச்சு, சாப்புடுர சுகமே சுகம்...

Wednesday, May 9, 2007

நான் வெச்சப் பாசிப்பருப்பு

இந்த வாரம் கடைக்குப் போன போது, பாசிப்பருப்பை பார்த்தவுடன், ஒரு ஈர்ப்பு, சரி சமைத்துத்தான் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன், ஒரு பொட்டலத்தை வாங்கிப் பொதியில் அடக்கினோம், நானும் கார்த்திக்கும்....

முழு நாளைக் கடத்திய அலுப்புடன், பாசிப்பருப்பை சமைத்துப் பார்ப்பது என்ற முடிவுடன் களம் இறங்கினேன்...அளவு தெரியவில்லை என்றாலும், ஒரு குத்துமதிப்பாக...அளவுகளை ஆளோசித்தவாரே ஆரம்பித்தேன் சமையலை...

என்னதான் நம்பிக்கை இருந்தாலும்,சமையல் சொதப்பும்பற்சத்தில் ஒரு பாதுகாப்பிற்காக... பாசிப் பயிர் ஒருபுறம் வேக, மறுபுரம் ரசத்தையும் தயார்பண்ணினேன்....

நினைத்ததைவிட சரியான சொதப்பல்...அதிக பருப்பைப் போட்டு இருந்தேன்..என்ன பண்ணுவது..மறுபடியும் கொஞ்சம் தக்காளி வெங்காயம் எல்லாம் பொட்டு ஒரு வழியாக தேத்தினேன் சாப்பிடும் அளவிற்க்கு...

மறந்த கொத்துமல்லியை ஈடு செய்ய...கொத்துமல்லி பொடியைப் பொட்டு இறக்கினேன்...

இப்படி அப்படி என்று..மற்றவர்கள் பாரட்டும் அளவிற்கு பக்குவமாக வந்தது கடைசியில்...

பழைய காலப் பள்ளி மதிய உணவு நினைவுகளை அசை போட்டப்படி..இரவு உணவை இனிதே முடித்தோம்..நானும் எனது நண்பர்களும்