Tuesday, May 22, 2007

பள்ளிப் பருவம் - ஒண்ணு

காலில 6 மணிக்கே எங்க அம்மா என்ன எழுப்பி விட்டுடும் ..அகில இந்திய வனொலில ஆங்கில செய்தி ஓடிகிட்டு இருக்கும். எனக்கும் எங்க அம்மாவுக்கும் அதுதா கடிகாரம்...

அப்படி இப்படி இன்னு கிளம்ப 8 மணி ஆயிடும். வேக வேகமா கொஞ்ச குழம்பு, அப்புரம் ரசம், கடைசியில் தயிர் ஊத்தி சாப்பிட்டுட்டு, அம்மா கொடுக்கும் 10 பைசாவை சட்டை பையில் போட்டுட்டு, மஞ்ச ஒயர் கூடையை தோலில் தூக்கி போட்டுகிட்டு நடக்க ஆரம்பிப்பேன் நண்பர்களுடன்...

ஒரு மைல் தூரம், இருந்தாலும் போர அலுப்புத் தெரியாது, விளையாடிட்டே போரதால...புலிங்கா அடிக்கிரது, ஒடக்கா அடிக்கிரது, சக்கரத்த ஒட விட்டு அதுக்கு பின்னாடி ஓடுரது, வேகமா வீட்டுக்கு வர்ரதுக்காக ஒரு கரண்டுமரம் விட்டு ஒரு கரண்டுமரம் ஓடுரது, எப்பவாவது யாரவது தெரிஞ்சவங்க வந்தா அவங்களொட சைக்க்ள்ல தொத்திக்கிறது, மாட்டு வண்டில பின்னாடி பைய மாட்டி விட்டுட்டு, பின்னாடியே ஒடிவர்ரது...இது போல இன்னும் பல அனுபவங்கள்..

மழை பேய்ந்தா மட்டும் பஸ்...ஒரு ருபாய்..போக 50 பைசா வர 50 பைசா..சாய்ங்களம் மழை வராட்டி மறுபடியும் நடைதான்..ஒரு சில நாள் மட்டும் அந்த 50 பைசாவே செலவு பண்ணிடுவே..இல்லாட்டி அம்மாகிட்டே திருப்பி கொடுத்துடுவே அந்த 50 பைசாவே..

யாரவது சொந்தகாரங்க வந்தா இன்னும் சந்தோசம்..என்ன கொஞ்ச அதிக காசு கிடைக்கும் வாங்கி திங்க...அதுவும் எங்க பெரியம்மா வந்த ரொம்ப சந்தோசப் படுரவ நனாத்தா இருப்பே....

புலிங்கா திங்கிரதுக்கு உப்பு மொலகாப் பொடி வேர..விட்டுல இருந்தே காகித பொட்டலத்துல...அதுலையும் துவுரு அடுச்சு, தொல்லிய கொஞ்சம் பிருச்சு, சாப்புடுர சுகமே சுகம்...

1 comment:

Rajesh Anandakrishnan said...

This blog reminds my schooling. good post Bala. Keep Writing very often and make guys like me happy.