Wednesday, September 5, 2007

பள்ளிப் பருவம் - இரண்டு

பள்ளி வாழ்க்கை...பசுமரத்து ஆணிதான் ஒவ்வொருவருக்கும்...

நான் படித்த காலத்தில்.. காரத்தரை..சமணம் போட்டுத்தான் உட்கார வேண்டும்..குதிங்கால் முட்டியில் புள்ளி புள்ளியாய், கல் குத்தல்களின் சுவடுகள்.

இப்போது, குளிரூட்டி.. காத்தாடி இல்லாத வாழ்க்கை, கருங்கல் சிறைக்குள் கடின வாழ்க்கை..தெரியவில்லை எப்படி சமாலித்தேன், எட்டு வருட வாழ்க்கையை..??..புரியவில்லை..புலப்படவுமில்லை...!!!

தண்ணி..என்னால் எப்போதும் மறக்க முடியாது..எனது கூடை அதிக கணமாக இருக்கும்..ஒரு கேன் தண்ணி..மதியம் சாப்பாடு வரை கூட வராது..எங்கு பார்த்தாலும் தண்ணி கஷ்டம்..பக்கத்து வீட்டுகாரர்கள் பாவம்..எத்தனை பேர் தண்ணி தாகத்தை தீர்ப்பார்கள்..சாய்ங்கலம் ஒரு மைல் நடந்த பின்பு தான் தண்ணி..அப்போது எனக்கு மட்டும் இறையாற்றல் இருந்து இருந்திருந்தால் இணைத்து இருப்பேன், அனைத்து இந்திய நதிகளையும்..

நாளிதள்களில், பள்ளி குழ்ந்தைகளை வேலை வாங்குவதை படிக்கும் போது மனம் பதறுகிறது..ஒரு காலத்தில் நானும் அதுபோல் நடத்தப்பட்டதை நினைக்கும் போது நகைச்சுவையாகத்தான் உள்ளது..தம்மு வாங்கவும், தேனீர்வாங்கவும், வடை வாங்கவும் சாலையை கடந்தது இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது...அப்போது பெருமையாகத்தான் இருந்தது.. இப்போதும் இது போலத்தான் இருக்கிறது..இன்னும் மாறவில்லை என நினைக்கிறேன்...

பல ஆசிரியர்கள் இருந்தாலும், கதை சொல்லும் ஆசிரியர்கள்..அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வார்கள்..சிறுவர்மலர், பார்த்தது கூட இல்லை..பெரியவன் ஆன பின்புதான் தெரிந்தது அவர்களின் கதை கரு சிறுவர்மலர் என்று..எனது அரியாமையை நினைக்கும் போது சிரிப்பும் வந்தது சிந்திக்கவும் தோனியது..

1 comment:

Rajesh Anandakrishnan said...

romba nalla ezhudhirukeenga bala. Naan school padikumpodhu kooda - thanni kashtam dhaan. Adhe schooluku enga appa dhaan Headmaster ippo. appakitta solli thanni issueva solve panna sonnaen. But government school ku fund kammiya irukku.

very good article. ennoda palli paruvam nyabagam varudu.